Sunday, April 19, 2009

வெற்றி காண்போம்

தந்தை தாய் இருவரும் தான் நாமே நேரில்
தான் கொண்டு வணங்குதற்கு ஏற்ற தெய்வம்
சிந்தையிலே இதைக் கொண்டு வாழ்வார் வாழ்க்கை
சிறப்பாகத் தெய்வ பலம் தன்னைச் சேர்க்கும்
முந்தி இதைத் தமிழ்த் தாயாம் அவ்வை என்னும்
முது பெரிய கிழவி அவள் சொல்லி வைத்தாள்
அந்தியிலும் சந்தியிலும் அன்னை தந்தை
அவர்களையே வணங்கி நின்று வெற்றி காண்போம்

1 மறுமொழிகள்:

said...

பெற்றோரே தெய்வம் பிறிதில்லை பற்றொடுதாள்
வீழ்ந்துதொழ நாளும் விரும்பு - என்கின்றீர் அருமை. அருமை. வாழ்த்துகள் கவிஞரே.

சிங்கைவரு கின்றீர் எனுஞ்செய்தி கேட்டறிந்தேன்
தங்கள் வரவேண்ணிக் காத்துள்ளேன் -பொங்குதமிழ்ப்
பாநூல் தருகின்றேன் பாவலரே! நூற்குற்ற
தேனூற் றுரையளிப்பீர் தேர்ந்து.