Friday, April 10, 2009

ஒழிஞ்சே போவோம்

ஏழ்மையினை ஒழிப்பதுவாய்ச் சொல்லி விட்டு
ஏழைகளை ஒழிக்கின்றார் சாதி சொல்லி
கோழைகள் தான் வீரர்கள் போல் அவர்கள் போடும்
கூத்தாட்டம் தாங்கவில்லை என்ன செய்ய
வாழையடி வாழையென இவர்கள் செய்யும்
வதை தாங்கிப் பழகி விட்டார் நமது மக்கள்
நாளை மறு நாள் வரும் இத் தேர்தலிலும்
நாட்டு மக்கள் வாக்களிச்சு ஒழிஞ்சே போவோம்

0 மறுமொழிகள்: