Friday, April 17, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்ப இராமாயணம்

சீதை கூடப் பார்க்காத புதுக் கோணத்தில்
ஸ்ரீராமன் தனைப் பார்த்தாள் சூர்ப்பனகை
போதையிலே மிதக்கிறவள் என்றால் கூட
புது விதமாய்ச் சுவைக்கின்றாள் இராமன் தன்னை
பாதையிலே நிற்கின்ற இராமன்தன்னைப்
பார்க்கின்றாள் மரவுரியில் தவக்கோலத்தில்
ஏது தவம் செய்ததந்தத் தவமே இவன்
ஏற்று அதைச் செய்வதற்கு வியந்தே வீழ்ந்தாள்


கம்பன்
எவன் செய இனிய இவ்வழகினை எய்தினோன்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்

1 மறுமொழிகள்:

said...

என்ன வரிகள்..!!!!!
நீவிர் வாழ்க பல்லாண்டு....!!!!!