Friday, April 17, 2009

குறளும் திருமந்திரமும்

ஏழைக்கு ஈவதே ஈகை மற்றெல்லாமும்
நாளைக்கு வரும் என்று நம்பியங்கு தருவதுதான்
பேழைக் குறளுக்குள் வள்ளுவனார் பேசுவது
பெரு முனிவர் திருமூலர் அதையேதான் சொல்லுகின்றார்
கோழைக் குணத்தார்க்கு ஒழுக்கம் விட்ட மானிடர்க்கு
கூட்டாக நோன்பதனைக் கைக் கொள்ளா தீயருக்கு
ஆளை அறியாமல் ஈவதனைத் தவறென்று
ஆணி அடித்தாற் போல் அடிக்கின்றார் ஒங்கியங்கு


புல்லறுத்துப் போட்டு பொறுப்பாய்த் தழைகளிட்டு
நல்ல விதம் நீங்கள் நாள் தோறும் பார்த்தாலும்
வல்ல மலடாக வந்து விட்ட பசு மாட்டில்
நல்லதாய்ப் பால் கறந்து நாம் அருந்தக் கூடுமோ?
அல்லதொரு காலத்தில் சென்று பயிரிட்டு
அறுவடைக்குச் சென்று நிற்றல் அறிவுடைமை ஆகுமோ
நல்லவர்க்கு ஈதலே நாதனுக்கு மகிழ்ச்சி தரும்
நலம் சேர்க்கும் என்றிங்கு திருமூலர் சொல்கின்றார்

திருமந்திரம்
அபாத்திரம்

கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதேயொக்குஞ்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரதுவாகுமே

0 மறுமொழிகள்: