Sunday, April 19, 2009

நம்மைச் சேர்ப்பான்

உழைத் ததனால் வாழ்வாரே வாழ்வா ராவார்
ஊர் அவரைப் போற்றி நிற்க உயிராவார் காண்
பிழைப் பதற்காய் வாழ்கின்றார் வாழ்வாரல்லர்
பிழையாகி ஊர் முன்னர் குனிந்து நிற்பார்
அழைப்பதற்கு ஒருவன் உண்டு என்றுணர்ந்தார்
அன்பு வடிவாகி நின்று இன்பம் சேர்ப்பார்
குழை மனத்தால் கும்பிட்டு உருகி நின்றால்
கூத்தாடும் பேரிறைவன் நம்மைச் சேர்ப்பான்

0 மறுமொழிகள்: