Thursday, February 11, 2010

சாவதெல்லாம் நாம் மட்டும்
சுட்டார்கள் காந்தி யவர் இறந்தா போனார்
சொல்லுகின்றார் உலகெங்கும் அவர் பெருமை
சுட்டார்கள் இந்திராவை இறந்தா போனார்
சொல்லுகின்றார் அவர் உள்ளத் துணிவை இன்றும்
கெட்டார்கள் கொன்றார்கள் ராஜீவ் தன்னை
கீழ்த்திசையின் ஞாயிறு போல் இன்றும் உள்ளார்
செத்தாலே சாவதெல்லாம் நம்மைப் போன்ற
சிறு உள்ளக் குறுமதியைக் கொண்டோர் தானே

0 மறுமொழிகள்: