Sunday, February 7, 2010

பாவாணரைவணங்கி நிற்போம்

பாவாணர் என்றாலே தமிழாம் தாயார்
பக்கத்தில் நிற்கின்றாள் என்றே தோன்றும்
ஆவார் அவரையெல்லாம் மறந்து நிற்கும்
அவலங்கள் தனைநினைந்தால் மனது நோகும்
போவார் மற்றாரெல்லாம் போவார் ஒர் நாள்
பொதிகை மலைத் தமிழன்னை இருக்கும் வரை
பாவாணர் இருப்பார் நம் தமிழாய் வாழ்வார்
பணிந்தவரை வணங்கி நிற்போம் வாரீர் வாரீர்

0 மறுமொழிகள்: