Sunday, February 21, 2010

காடுகள்

ஆனைகளின் அட்டகாசம் ஊருக்குள்ளே
அடுத்தாற் போல் புலிகளது அட்டகாசம்
ஊனமுற்ற மனம் கொண்ட மனிதர்களின்
ஒலமிது செய்திகளில் வருகிறது
ஞானமற்று அவர்களது வாழ்விடத்தில்
நாடோறும் நீங்கள் போட்ட ஆட்டமன்றோ
ஆனையுடன் புலியதுவும் நீருக்காக
அங்கேயும் இங்கேயும் வருவதெல்லாம்


மலைகளுக்குள் காடுகளில் மான்களோடு
மரம் நிறையப் பறவைகளும் விலங்கினமும்
இறைவனவன் தந்திருந்தான் அவர்களுக்காம்
இடமதனைத் தலைவர்களே கொள்ளையிட்டீர்
மறைவிடங்கள் அனைத்தையுமே அழித்தொழித்தீர்
மனம் போல அரண்மனைகள் கட்டிக் கொண்டீர்
உறைவிடத்தைக் குடிநீரை இழந்ததாலே
ஊருக்குள் வருகிறது விலங்கினங்கள்


காட்டுக்குள் நீங்கள் செய்த அட்டகாசம்
கருணையற்ற அட்டகாசம் அதனை விட்டு
நாட்டுக்குள் விலங்கினங்கள் வந்தால் அதை
நாக் கூச்சம் இல்லாமல் திட்டுகின்றீர்
வீட்டுக்குள் வேறு யாரும் வந்து சென்றால்
விரைவாகத் திருடர் என்று புகாரும் சொல்வீர்
காட்டுக்குள் நீங்கள் சென்று திருடி வந்த
கதைகளினை கடவுளன்றி யார் அறிவார்

0 மறுமொழிகள்: