Saturday, February 6, 2010

ஆமா உண்டா சொல்லு

கண்ணைக் குத்திரும் சாமின்னு அன்னிக்குக்
கதை கதையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
கண்ணேயில்லாமத் தான் சாமில்லாம் நிக்குது அவங்க
கண்ணைக் குத்தினது யாரு சொல்லு
ஆமா யாரு சொல்லு


அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
அன்னிக்குச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
அடுத்தவர் பொருளையே ஆட்டையைப் போடுறார்
ஆத்தாவே இல்லியா அவருக்கிங்கு
ஆமா அவருக்கிங்கு


ஊரார் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
உண்மையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
ஊரையே தூக்கி முழுங்குறார் அவருக்கு
உண்மை சொன்ன ஆத்தா உண்டா சொல்லு
ஆமா உண்டா சொல்லு


சொடலமாடன் வந்து குடலப் புடுங்குவான்னு
சொல்லி வளத்தாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
சொடலமாடன் கோயில் நிலத்தையும் கூடத்தான்
கொள்ளை அடித்திட்டார் எங்க தாதா
ஆமா எங்க தாதா

0 மறுமொழிகள்: