Friday, February 12, 2010

ஆபிரகாம் லிங்கன்
அழகில்லா முகத்தான் தான் உள்ளம் எல்லாம்
அன்பதனைக் கொண்டவனாய் உயர்ந்து நின்றான்
வழியற்ற வறுமையிலே உழன்றவன் காண்
வரலாறாய் ஆகி நின்றான் அமெரிக்காவின்
பழியான கறுப்பர் இனக் கொடுமை தன்னை
பாவம் என்று உணர்ந்து அதனைத் தீர்க்க எண்ண
கழியாதார் அவனையும் தான் சுட்டுத் தீர்த்தார்\
ககனம் எல்லாம் இதுதானே கதையாய் ஆச்சு

0 மறுமொழிகள்: