Thursday, May 1, 2008

தமிழகத்தில் முதல் குரல்

     பதிவு  செய்து  தொழிற்சங்கம்  நடத்துகின்ற
          பாங்கதனை  அறியாராய் தமிழர் நாட்டில்
     மதி நிறைந்த  இரு வீரர்  நடத்தி நின்ற
         மாபெரிய  போராட்டம்  உமக்குச் சொல்வேன்
     சதி நிறைந்த  வெள்ளையர் தம் தொழிற்சாலையில்
         சங்கடங்கள்  துன்பங்கள்  கண்டு  நொந்து
     விதி யென்று அதனையுமே  ஏற்று  வெந்து
          விழலுக்கு உழைத்து  நின்ற  ஏழையரின்


     உரிமைக்காய்  குரல்  கொடுத்த  காரணத்தால்
          உலகிலேயே முதன் முதலாய்  நாற்பதாண்டு
     சிறைவாசம்  தனைப்  பெற்றார்  சிதம்பரனார்
          சீரழிந்து  அவர்  குடும்பம்  உலைந்ததன்றே
    உரம்  கொண்ட  குரலுக்குச்  சொந்தக்காரர்
        உத்தமராம்  சிவா  அவர் உடனே சென்றார
    வரலாற்றில்  உழைப்பவர்க்காய்  முதற் குரலே
        வ்.உ.சி.   சிவா தந்த  இடிக் குரலே
    
         

0 மறுமொழிகள்: