Saturday, May 10, 2008

சிலைகள்

     சிலைகளினால்  விளைகின்ற  கவலை தன்னைச்
          சிந்திக்க ம்றந்தாரே நாட்டில்    உள்ளோர்
     அலை அலையாய் ஏழைகளே புரியாராகி
          அழுகின்றார்  தொழுகின்றார் அழிகின்றாரே
      வலை யிதனை  கைக்கொண்டு பணம் படைத்தோர்
           வாக்கு்கள்  சேகரிக்க வழிகள்  கண்டார்
      நிலை யிதனைப்  புரிந்திட்ட  நல்லோர்  இந்த
            நிஜம்  சொல்லி  ஏழைகளைக் காக்க வேண்டும்


     வெவ்வேறு  சாதியிலே  பிறந்த  செல்வர்
            விருந்துக்கு  ஒன்றாகச் சேர்வதுண்டு
     அவ்வவர்  தம்  சாதியிலே ஏழைகளை
             அழைப்ப்துண்டோ விருந்துக்கு  இல்லை  அய்யா
     உள்ளவர்கள்  ஒரு  சாதி  ஒன்றுமில்லார்
              உலகெங்கும் ஒரு சாதி உணர்ந்து விட்டால்
     தள்ளி  நின்று  இவர்களையே தனிமையாக்கி
              தாம்  வெல்ல  உழைப்பவர்க்கு வெற்றி உண்டு
          

0 மறுமொழிகள்: