Sunday, May 18, 2008

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

      இல்லாதார்  பிச்சையெடுத்தேங்கி  ஏங்கி
                 எவ்விடத்தும் அலைகின்றார் அய்யோ  பாவம்
      பொல்லாதார்  இங்கொருவர்  பிச்சையேற்று
                  புவனமெலாம்  அலைவதிலே  நீதியுண்டோ
       நல்லாரே  கேட்டிடுவீர்  உம்மோடன்றி  
                   நான்  இதனை  யாரிடத்தில்  சொல்ல  ஏலும்
       வல்லார்கள்  பிச்சையென்று  வந்து விட்டால்
                   வரை முறைகள்  இல்லாமல்  பிடுங்குகின்றார்



       கொடுக்கின்ற  வாழ்வளித்தான்  இறைவன்  என்று
                    கொள்ளாமல்  தான்  என்ற உணர்வு  ஒங்க
        மிடுக்காகத் தான்  அலைந்தான்  மாவலியும்
                     மீட்டவனுக்காய் அங்கு  அருளே  செய்ய
        தடுத்தவனை ஆட்கொள்ள  மிகச்  சிறிய
                      தனி வடிவம் கொண்டு வந்து  பிச்சையேற்றான்
        எடுத்த  பிச்சை  மூன்றுலகும் கொண்ட  பிச்சை
                       இருந்தும் எந்தன்  வளையலையும் பிச்சை  கொண்டான




         கொடுப்பவரைத் தேடி  அன்றோ  பிச்சை தன்னைக்
                        கொள்பவரக்ள்  வர வேண்டும்  அதனை விட்டு
          இருக்கின்ற  இடத்திருந்து  பிச்சை  தன்னை
                         எடுப்பதிலே  நியாயம்  உண்டோ சொல்வீர்  அய்யா
          பொறுக்காத   காதலினால்   மெலிந்தழிந்து
                          போனதனால்  கை வளைகள்  கழன்று போக
           எடுத்தவனே  கண்ணனென்றும்  பிச்சை  தன்னை
                            ஏற்பதற்கு  எனைத் தேடி  வருதல்  தானே

            பொருத்தம்  அதை  விட்டு எங்கோ  இருந்து  கொண்டு
                             போடு  பிச்சை  எனற்வனே  எடுத்துக கொள்ளல
             வருத்தம்  தரும்  என்னைப்  போல  அவனுக்கென்றே
                              வழங்குதற்கு  பிறந்தார்க்கு  யார்தான் சொல்ல
              கருத்த  மேனிப் பேரழகன்  கண்ணன்  என்னும்
                                கனி வாயன்  குழல்க் கையன்  தன்னை  இங்கு
              திருத்தமாகத் த்மிழ்க் கவியில்  பாடுகின்றாள்
                                 திருவில்லிப் புத்தூரில்  பிறந்த  ஆண்டாள

                                                         செய்யுள்

                            மச்சணி  மாட மதில்  அரங்கர்  வாமனனார்
                            பச்சைப்  பசுந் தேவர் தாம்  பண்டு நீரேற்ற
                            பிச்சை  குறையாகி  என்னுடைய்  பெய் வளை மேல்
                            இச்சை யுடையரேல்  இத்தெருவில்  போதாரே

0 மறுமொழிகள்: