Saturday, May 10, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

         காதலர்  தோள்கள்  சேர்ந்து களி  கொண்டு  ஆடும்  நேரம்
                            மாமதி  வானில்  தோன்றும் மங்கையோ் கண்டதில்லை
         ஆதலால்  மதிக்குத்  தன்னுள்  அவமானம்  பிடுங்கித் திங்க
                             சோதிக்கச் சமயம்  தேர்ந்து சோதனை செய்ததங்கு
         பாதிக்கப் பட்டாள்  பெண்ணாள் பனி மதிக் கதிர்கள்  பட்டு
                              ஆதிக்க  சக்தியாகி  ஆட்டுது  மதியும்   அங்கே
         வேதனைப் பட்டாள் அங்கே விரிஉயர் முலைகள்  மீதே
                               பாதிப்பைச் செய்யும்  அந்த பனி மதிக் கதிர்கள்  கொண்டு




         சோதனை  நேரும்  நேரம்  சொந்தங்கள்  ஒன்றே  என்றும்
                                ஆதரவாகும்  என்ற  அம்மொழி  உண்மை  கண்டாள்

         வேதனை  தீர்க்க  அங்கு    விரி குழல்  தன்னில்   மங்கை
                                 பேர் தரும் மலர்கள்  சூட்டி பெருமைகள் செய்ததாலும

         சாதனைப்  பூக்கள் தமமைச்  சார்ந்துள்ள  வண்டின்  கூட்டம
                                 தாம் ஒரு பந்தலைப்  போல்  தளிர்க் கொடி மேலே கூடி

         வான் தரும்  மதியின்  துன்ப  வாட்டத்தை  போக்கு தென்றான்
                                  தேன் தரும் கவிதை தந்த  தென் ஜெயங்கொண்டான் தானும


                                                            செய்யுள்
                 களபம்  வண்டல்  இடும   கலச கொங்கைகளில்
                 மதி எழுந்து  கனல் சொரியும் என்று
                 அளக பந்தி மிசை அளிகள்  பந்தர் இடும்
                  அரிவைமீர் கடைகள் திறமினோ
                          ்
                 

0 மறுமொழிகள்: