Friday, May 2, 2008

கண்ணதாசன்

     பாய்ந்து  வரும்  தமிழழகு  வார்த்தையெல்லாம
          படிப் படியாய்  வரி வடிவம்  கொள்ளும் நேரம்
     தோய்ந்து  விடும்  நம் மனது  துள்ளி  நிற்கும்
          தொடர்ந்து  வரும்  பாடல்களில்  மயக்கம்  கொள்ளும்
     ஆய்ந்தெடுதத  தமிழ்  அங்கே  அழகு  காட்டும்
          அவனால் தான்  முடியும்  என்று  உள்ளம்  சொல்லும்
     காய்தலுக்கும்  உவத்தலுக்கும்  ஆளாய்  நின்ற
          கவிஞன்  அவன்  செட்டி  நாட்டுக்  கண்ணதாசன

     தாய்மையினைப்  பாடி நிற்பான்  தங்க மகன்
          தாய்க் குலமே  அவனுக்குள்  அடக்கமாக
     தூய்மையினைப்  பாடி நின்றால்  அவனுக்குள்ள
          துய்ய  நிற  வெண் மனது தோன்றும் அங்கே
     வாய்மையினைப்  பாடி  நிற்பான்  இடையிடையே
         வழி தவறிச் சென்றதெல்லாம்  நினைவில்  கொள்ள
     ஆய்ந்தன்னை  தமிழ்  அவனைப்  பிள்ளையாக
          அரவணைத்தாள்  அவன்  எங்கள்  கண்ணதாசன்

     போய்  அவனைப்  படித்தி டுவீர்  இளையவரே
          புரியும்  கவி  எழுதும்  வகை  புரியும்  நன்றாய்
     காய்  தெரியும்  கனி தெரியும் கவி தெரியும்
          கனித் தமிழின்  செல்வமெல்லாம் கையில் சேரும்
     வாய் திறந்தால்  கவிதை  எல்லாம்  வடிவம் காட்டும்
          வண்டமிழாள்  தண்டமிழாள்  உம் தமிழாவாள்
     ஆய்ந்துணர்வீர்  இளையவரே  அன்னை தமிழ்
          அவளளித்தாள்  கண்ணதாசப்  பேரான் தன்னை
   
          

     

2 மறுமொழிகள்:

said...

அருமை அருமை - அழக் தமிழ்க் கவிதை அருமை.

தடுமாறும் போதையிலும் கவி பாடும் மேதை - கண்ண தாசன்.

கண்ணதாசனைப் பற்றிய கவிதை மனதை மகிழ்விக்கிறது.


நன்றி

said...

ஆஹா..கண்ணதாசனை மிக எளிதாக அற்புத நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள்.
நன்றி அய்யா!