Friday, May 23, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                 பழகி விட்ட  பழக்கங்களை  விடுவதற்கு
                          படுகின்றார்  மனிதர்களே  துன்பம்  என்றால்
                 அழகு மிக்க  ஆண்  ஆனை  சேரனது
                          ஆர்ப்பாட்டப்  போரில் வெற்றி சேர்க்கும் ஆனை
                  பழகு  தமிழ்  அழகு  அதன்  நடையழகு
                           பார்த்தவர்கள்  தொழுது  நிற்கும்  தனி  அழகு
                  உழுது  நிற்கும்  பகைவர்களின்  மார்பை  எங்கும்
                           ஒரு நொடியில்  பகை  அழிக்கும்  வீர  ஆனை



                  முழு   நிலவு    நாள்  தோறும்  அழகு  ஆனை
                           முரடாக  மாறி நிற்கும்  தன்மை கேட்பீர்
                   பழுதின்றி  பகை  நாட்டு  மன்னர்  தம்மின்
                           பளபளக்கும்  வெண்குடையைப் பறித்தெறிந்து
                   தொழுதவரைப்  பணிய வைத்த  பழக்கத்திலே
                           தும்பிக்கை  தனைக் கொண்டு  நிலவும் ஏதோ
                    வழுவான பகை  நாட்டார்  குடைதானென்று
                           வலிந்ததனைப்  பறித்திடத் தான் முயல்கிற்தாம்



                                       முத்தொள்ளாயிரம்


                வீறு சால்  ம்ன்னர்  விரிதாம  வெண்குடையை
                பாற  எறிந்த  பரிசயத்தால்-தேறாது
                செங்கண்  மாக்கோதை  சின வெங் களி ஆனை
                 திங்கள்  மெல்  நீட்டும்  தன்  கை

0 மறுமொழிகள்: