Thursday, May 8, 2008

தீந்தமிழ் நாட்டின் பாரதியார்

   




          பூப்பெய்தாப்  பெண்களையே  திருமணத்தில்
                    பொருத்துகின்ற  மடமையினை   நிறுத்தச் சொன்னான்
          காப்பென்று  வந்தவனோ  துணையாயின்றி
                    கயவாளி  ஆனாலோ  ஒதுக்கச் சொன்னான்
          போப்போவென்றவன் தன்னைத் தூரத் தள்ளி
                    பொருந்து நல்ல  மனத்தானைச்  சேரச் சொன்னான்
          தாய்க்கோலம்  வேண்டாமல்   தலைமை கொள்ளத்
                    தான்  விரும்பும்  பெண்களையே  போற்றச் சொன்னான்


         இசுலாமே  உலகத்தின்  பெரிய  மார்க்கம்
                    என்றாகும்  என்பதனைத் தெளியச் சொன்னான்
        வசு தேவக் கண்ணனைப் பல்  வடிவில்  தேர்ந்து
                    வாழ்வியலின் வழியாகச் சேர்த்துச் சொன்னாண்
        தசை ரத்தம்  கேட்கின்ற  ஏழைத் தெய்வம்
                    தன்  தெய்வம்  என்றவனும்  ஆடி நின்றான்
        பசையுள்ள  பணக்காரர்  தம்மை விட்டு
                    பாடு படும்  பாட்டாளி  பக்கம்  நின்றான்


       எட்டு  மொழி  முறையாகக் கற்றுத்  தேர்ந்தான்
                    எம்மொழிதான்  செம்மொழி  என்றெழுந்து நின்றான்
       கட்டுரைகள்  கவிதை  என்று  பல மொழிந்தான்
                     கனித்தமிழே  இனிய  மொழி  என்ற்றைந்தான்
      சிட்டுக்   குருவியென்றே   சிறகடித்தான
                     செந்தமிழர்  நாடென்றே  தேன்  வடித்தான்
       மட்டற்ற  விரிவானின்  வெளியில்  எங்கும்
                      மாக் கவிஞன்  பாரதியே  நின்றொளிர்ந்தான்

2 மறுமொழிகள்:

said...

ஆஹா..பாரதியை அகமும் புறமும் அழகாக சொல்லி..

மிகவும் நன்றாக உள்ளது அய்யா!

said...

ஆஹா..பாரதியை அகமும் புறமும் அழகாக சொல்லி..

மிகவும் நன்றாக உள்ளது அய்யா!