Wednesday, May 14, 2008

நபி பெருமான் தந்த வழி

         ஹிரா மலைப்  பொதும்பரிலே  நபி பெருமான்
                     இருக்கின்றார்  நண்பருடன் அவரைக் கொல்ல
         உறாத ஒர் கூட்டத்தார்   படைகளோடு
                      உயரேயே  வருகின்றார்  நண்பர் சொன்னார்
         தராதரம்  இல்லாதார்  கூட்டமாகத்
                       தனியாக  இருக்கின்றோம் நாமே என்றார்
         வராதொன்றும்   இறையென்றும்  நம்மோடுள்ளார்
                       வாடாதீர்  என்று சொன்னார்  வந்தார்  சென்றார


          இறையென்றும்  நம்மோடே  இருப்பதனை
                         என்றைக்கும்   மறவாது  வாழ்தல்  வேண்டும்
          சிறையாக  மனத்துக்குள்  சிந்தனைகள்
                          சேர்ப்பதென்றும்  துன்பங்கள்  தேடித் தரும்
          மறைத்  தூதர்  சொன்னதனை  மனத்தில்  கொள்வீர்
                           ம்லையினிலே சிலந்தி வலை தோன்றக் காண்பீர்
          அரை குறையாய்த்  தொழுவதனைக் கைக் கொள்ளாதீர
                            அவனறியா  தெது  உண்டு  அவனியிலே
                            


         

0 மறுமொழிகள்: