Wednesday, May 14, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

         போகக் களம்  விட்டுப்  போர்க்களம்தான்
                 போகையிலே சொல்லி விட்டுச் சென்ற காளை
          ஆகச் சில  நாளில்  வநதே சேர்வான என்று
                  ஆர்வமுடன்  காத்திருந்தாள்  ஆசைப் பெண்ணாள்
          தாகம்  மிகக் கொண்டாள்  தழுவலுக்காய்
                   தடுமாறித் துடிக்கின்றாள் விழிகள் ஏங்க
          நாகப் படம் போன்ற பெண்ணழகோ
                   நாள்ப் பலவாய்  உறக்கத்தை  கெடுத்ததங்கு


          வருவது  போல்  எண்ணத்தில்  ஒடியங்கு
                   வாயிற் க்கதவில்  இட்ட  தாழ் திறந்தாள்
           வரவில்லை என்றவுடன் மனம்  தளர்ந்து
                    வாட்டமுடன்  தாழினையே இட்டாள்  மீண்டும்
            ஒரு முறையா  இரு முறையா  பல முறைதான்
                     ஒடி ஒடித் திறந்தாளாம்  மூடினாளாம்
            திருகுகின்ற குமிழதுவும்  தேய்ந்த  சேதி
                      தென் தமிழான்  ஜெயங் கொண்டான்  சொல்லுகின்றான்

                                               செய்யுள்

                      வருவார்  கொழுநர்  எனத் திறந்தும்
                       வாரார்  கொழுநர்  என அடைத்தும்
                       திருகும்  குடுமி  விடியளவும்
                       தேயும்  கபாடம்  திறமினோ

0 மறுமொழிகள்: