Thursday, May 1, 2008

மே தினம்

     உலகத்துத்  தொழிலாளர்  ஒன்று  கூடி
          உளம்  மகிழ்ந்து  கொண்டாடும்   மே தின  நாள்
     கலகத்துக்காரர்  என்று  கைது  செய்து
          கடுந் தண்டனை  அளித்துத்  துன்பம்  தந்தும்
     வெலவெலத்துப் போகாம்ல்  உழைப்பாருக்காய்
          வீரர்களும்  போராடி வென்ற  நாள்  காண்
     கலகலப்பாய்க்  கொண்டாட  எண்ணும்  நேரம்
          கண்ணில்  படும்  உண்மை  அதைத் தடுக்குதையா

     உண்மையிலே  தொழிலாளர்  உரிமையெல்லாம்
           உலகெங்கும்  பெற்று  விட்டார்  என்று  சொல்லல்
     கண்ணிருந்தும்  குருடரென  வாழும்   ந்ம்மைக்
          கண்டவர்கள்  உமிழுதற்கே  வழி வகுக்கும்
     அண்மையிலே  இருக்கின்ற தொழிலாளரின்
          அவதிகளைப்  பார்க்கையிலே வெட்கம் கொல்லும்
     எண்ணும்  இதைத்  தொழிலாளர்    அனைவருக்கும்
          எப்பொழுதும்  நன்மை  வர  உழைத்து  வெல்வோம்

0 மறுமொழிகள்: