Sunday, May 11, 2008

விழுந்து வணங்குகின்றேன்

      வெளி நாட்டில்  வாழுகின்ற  தமிழினத்தீர்
                 விழுந்தே  நான்  வணங்குகின்றேன்  உங்கள்  காலில்
       தெளிவாக  வீட்டினிலே  குழந்தைகட்கு
                  தீந்தமிழைக்  கற்றே  நீர் தருதல்  வேண்டும்
       களி கொள்ளும்  எமைப் போன்ற  தமிழர்  நெஞ்சம்
                  கை கூப்பி  உம்மையுமே தொழுவோம் நாங்கள்
       அளிப்பீர்  இப் பெரு வரத்தை  பிள்ளைகட்கு
                   அன்னை தமிழ் உமை  வாழ்த்தி  அருகில்  நிற்பாள்

5 மறுமொழிகள்:

said...

கண்ணன் ஐயா,
நல்ல விண்ணப்பம்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் பலர் தமிழோதி,தமிழாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில்தான் கட்சி,இலக்கிய உலக அரசியல் தமிழை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது.

said...

கண்ணன் ஐயா,நல்ல விண்ணப்பம்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் பலர் தமிழோதி,தமிழாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில்தான் கட்சி,இலக்கிய உலக அரசியல் தமிழை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது.

said...

தமிழ் பேசி தமிழ் ஒழிக்கும்
தமிழர் இங்கே
தமிழ் நாட்டில் மட்டும்தான்
உண்டு அய்யா
கமழ்கின்ற அன்னை தமிழ்
காப்பாற்றத் தான்
கையேந்தி நிற்கின்றேன்
உங்களிடம்
வாழ்க தமிழுடன்
நெல்லைக்கண்ணன்

said...

அன்னைத் தமிழுக்கு அரும் தொண்டினை
அருமையாய் நடாத்திவரும் நற்றமிழ் காவலர்
அருமை அண்ணாச்சி நெல்லை கண்ணன்
அவர்களின் புதுமுயற்சி கோலோச்சடும்
அவனியெல்லாம்

said...

அன்னைத் தமிழுக்கு அரும் தொண்டினை
அருமையாய் நடாத்திவரும் நற்றமிழ் காவலர்
அருமை அண்ணாச்சி நெல்லை கண்ணன்
அவர்களின் புதுமுயற்சி கோலோச்சடும்
அவனியெல்லாம்