Friday, May 2, 2008

பழம் பாடல் புதுக்கவிதை பரணி

     பழம் பாடல்  கனிப் பாடல்  செயங்கொண்டான்
          பக்குவமாய்  பொற்குவையாய்  தந்த  பாடல்
     உளம்  கொள்வீர்  உவகையிலே  உச்சம் கொள்வீர்
         உண்மையிது  பொய்யில்லை  உணர்வீர்  நீரே


     கிளி வளர்த்தாள்  ஒரு  கிள்ளை  சொன்னதெல்லாம்
          கிண்ணாரம்  கொட்டி உடன் மீண்டும் சொல்லும்
     பழி  வளர்க்கும்  அது  என்று  தெரியாளாகி  
          படுக்கையறைக்குள்ளேயே  வைத்துக் காத்தாள்
     களி  நடக்கும்   வழி நடக்கும்  காதல்   கொள்ளை
          கட்டிலிலே  நடக்கின்ற  நேரமெல்லாம்
     கிளி  இருக்கும்  உள்  அதனை மறந்தாளாகி
          கிறுக்கு  மொழி  பல  உளறி  வளர்த்தாள்  காதல்

     
     அடுத்து  பகல்  விடிந்ததங்கே  தோழி மார்கள்
          ஆற்றுக்கு  நீராட  அழைக்க  வந்தார்
     கெடுத்ததங்கு  கிளி  அவளின்  மானம் தன்னை
          கெக்கலித்துச்  சிரித்து  நின்றார்  தோழிமார்கள்
     அடுக்கடுக்காய்க்  காதலனைக்  கொஞ்சிக் கொஞ்சி
          அவள்  உரைத்த  வார்த்தையெல்லாம்  கிளி  அடுக்க
     படுத்திடவே  தொடங்கி நின்றார  தோழிமார்கள்
          பாவி மகள் வாய்  புதைத்துத் தலை கவிழ்ந்தாள்

 
                  செய்யுள்
     நேயக்  கலவி மயக்கத்தே  
     நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப
     வாயைப் புதைக்கும்  மட நல்லீர்
     ம்ணிப் பொற் கபாடம்  திறமினொ

0 மறுமொழிகள்: