Tuesday, May 6, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     காத்திருந்து  காத்திருந்து  கண்ணிரண்டும்   ஒய்ந்த மகள்
           பார்த்திருந்த  பாவி மகன்  பக்கத்திலே வ்ந்தமர்ந்தான்
     சேர்த்தணைக்கும்  ஆசை யுண்டு  சிற்றிடையாள கோபமதால்
           பார்த்த படி்  காத்திருந்தான் பயமதனால்  வேர்த்திருந்தான்
     ஆர்த்தசையும்  மார்பிரண்டும்  அருகினிலே  இருந்தும்  அவைக்
           கோர்த்தணைக்க முடியாமல்  குழம்பி  நின்றான் தங்க மகன்
     வார்த்தைகளால்  ஏதேனும்  வம்பு  வரக் கூடும்  என்றே
           வாய்  திறக்க மாட்டாமல்  வாடி அவள்  முகம்  பார்த்தான்

     பார்த்தபடி  அமர்ந்திருக்கும் பாவமதைப்  பார்த்த  பெண்ணாள்
           சேர்த்தணைக்க  முடியாமல்  சிந்தனையில்  சிரித்திருந்தாள்
     வார்த்தையினைக் காக்காம்ல்  தாமதமாய்  வ்ந்ததனால்
           வடிவ்ழகைக் காட்டாமல படீரென்று  எழுந்து சென்றாள்
     கோர்த்தவளின்  முந்தானைத் தலைப்பினையே  பிடித்திழுத்தான
          வேர்த்தவளோ  விடு  விடென்று  வேகத்தைக் காட்டுகின்றாள்
     பார்த்தவனோ மேலும் மேலும்  பற்றியே  இழுக்கின்றான்
           ஆர்த்தவளோ  விடு விடென்று அதையேதான்  சொல்லுகின்றாள்

     போய்த் தொலையவில்லை  அவள்  போவதற்கும்  மனதில்லை
           காய்த்த  ம்னம்  இல்லாத  கனி  மனத்தாள்  நின்றிருந்தாள்
     வாய்த்த  நல்ல  வாய்ப்பதனில்  சேலை தொட்டுப் பார்த்ததையும்
           வடிவழகாள்  விடச்  சொல்லி  வாயதனால்   சொன்னதையும்
    பேர்த்தெடுத்துப்  பார்க்கின்றான்  பிடி என்று சொல்வதைத்தான்
           வார்த்தை  மாற்றி விடு  என்று  வாயழகில்  காட்டுகின்றாள்
    ஆர்த்து  நின்ற்  அன்பு மகன அகராதி கண்டு   கொண்டான்
           வார்த்தை  விடு  என்று  சொன்னால்  வா என்னைப்  பிடி  என்று

                                                          செய்யுள்

     விடுமினெங்கள்  துகில்  விடுமினென்று  முனி
     வெகுளி  மென்குதலைத் துகிலினைப்
     பிடிமினென்ற  பொருள்  விளைய்  நின்றருள்  செய்
     பெடை நலீர் கடைகள்  திறமினோ
     

0 மறுமொழிகள்: