Monday, May 19, 2008

பழம் பாடல் புதுக் கவிதை முத்தொள்ளாயிரம்

             முத்து களுக்  கரசன்  பாண்டியனை
                    முலை தாங்காச்  சிற்றிடையாள்  பார்த்து விட்டாள்
              கத்துங்  கடல்  வாழும்  சங்கினத்தால்
                     கை  வளைகள்   கொண்டிருந்தாள்  வேர்த்து விட்டாள்
              பத்து  பதினைந்து  நாள்  கழிந்தும்
                     பாவி மகன்  பவனியில்லை  சோர்ந்து விட்டாள்
              செத்தொழிந்து விடுவாள்  போல் காட்சி  தந்தாள்
                     செவ்விதழாள் துன்பமதைச் சேர்த்து நொந்தாள்


              கைவளைகள்  கழன்று  விழும்  உடனிருப்போர்
                       கண்டு விடத் தம்  காதல்  தெரிந்து விடும்
              மை விழியாள்  துடிக்கின்றாள்  அந்த  நேரம்
                       மன்னவனின்  சங்கொலியோ  பூம்  பூம்  என்னும்
               அய்யமில்லை  உறவுக்காய்  உறவு  வந்து
                        அன்போடு  தன்  உறவைக் காக்கும் என்ற
                பொய்யில்லா  அம்மொழியைப் புரிந்து கொண்டேன்
                         பொற் சங்கு கைச் சங்கைக்  காத்தது  பார்

                 சொல்லுகின்றாள்  அப்பெண்ணாள் புரிந்தீரோ  நீர
                          சோகமதில்  கை வளைகள்  கழலும்  நேரம்
                  மெல்லிடையாள்  வளைச் சங்கை  பாண்டியனின்
                           மேலான சங்குவந்து  காத்ததென்று
                  வெல்லுகின்ற  தொழில்  ஒன்றே  கொண்ட  வேந்தன்
                           வீதி  வலம்  வருகின்றான்  என்றுணர்த்த
                   நல்லொலியாய்ச் சங்கொலிக்க  வளைகள்  நிற்க
                            நலம்  கொண்டாள்  பாண்டியனைக் காண்போம் என்று
                  
                         

                                     முத்தொள்ளாயிரம்

                செய்யார்  பிறர்  எனினும்  செய்வர்  தமர்  எனுஞ் சொல்
                 மெய்யாதல்  கண்டேன்  விளங்கிழாய்  -  கையார்
                 வரிவளை  நின்றன  வையையார்  கோமான்
                  புரிவளை  போந்து இயம்பக் கேட்டு
                          

0 மறுமொழிகள்: