Tuesday, May 27, 2008

எவர் கேட்டார்

               கோயில்  ஒன்று  கட்டுதற்கு  ஆசை  கொண்டார்
                           கோடி கோடியாய்க்  குவித்த நண்பரொருவர்
                ஆயிரம்  பல்லாயிரமாய்  ஏழை  மக்கள்
                            அரவணைக்க  ஆளின்றி   அலைகின்றார்கள்
                தாயினைப்  போல்  அவர்களையே  ஆதரித்து
                         தழுவி  நல்ல  உதவிகளை  நீங்கள்  செய்தால்
                போய்  அந்த  உதவியெல்லாம்  ஆண்டவனின
                         பொற் பாதம்  தனைச் சேரும்  அதனை விட்டு


                 கோயில்  ஒன்றும்  வேண்டாமே  என்று  சொன்னேன்
                           கோபமுற்று  தீ விழியால்  என்னைச்  சுட்டார்
                  பாயிரங்கள்  பனுவல்  என்று  எதுவும்  வேண்டா
                            படைத்தவனின்  படைப்பான மனிதர்  கோயில்
                  ஆங்கவர்க்கு  செய்கின்ற  உதவி யொன்றே
                            ஆண்டவனைச் சென்றடையும்  கோயில்  அல்ல
                  ஈங்கிதனைத்  திருமூலர்  சொல்லிச்  சென்றார்
                             எவர்  கேட்டார்  கோயில்  கட்டி  அலைகின்றாரே


                                                                திரும்ந்திரம்

                              படமாடும்  கோயில்  பரமர்க்கொன்று  ஈயில்
                              நடமாடும்  கோயில்  நம்பர்க்  கங்கா
                              நடமாடும்  கோயில்  நம்பர்க் கொன்று  ஈயில்
                              படமாடும்  கோயில்  பரமர்க் கங்காகும்
               

1 மறுமொழிகள்:

said...

இருக்கின்ற கோயில்கள் போதும்!
இருப்பவர்க்கு உதவிடுவோம்!
இருக்கும் கோயில்களைக் காத்திடுவோம்
இல்லாதவர்க்கு உதவி செய்வோம்!