Saturday, May 17, 2008

வழியேயில்லை

          ஆசையினால்  மனிதர்  படும்  பாட்டையெல்லாம்
                       அன்றாடம்  பார்க்கின்றோம்  செய்தியாக
          ஒசையின்றி  ஏய்ப்பார்கள்  தினம்  தினம் தான்
                        உருவாகி  வருகின்றார்  நல்லார்  போல
           பாசமெல்லாம்  காட்டுகின்றார்  பல விதத்தில்
                        பைத்தியமாய்  ஆக்குகின்றார். படித்தார் கூட
           காசு  வரும்  என்ற  பெரும்  ஆசையினால்
                        கைக்காசும்  கடனும்  கொண்டு  அழிகின்றாரே


           வருகின்ற  வரவிற்குள்  வாழ்க்கைதன்னை
                         வரமாக  வாழ்வதற்கோர் வாய்ப்பைக் கொண்டு
            தருகின்றான்  இறைவன்  இது போதும்  என்று
                          தரமாக   வாழாமல்   ஆசை கொண்டு
            வருவாரும்  போவாரும்  காட்டுகின்ற
                          வாயழகில்  எல்லாம்  நீர்  வீழ்ந்தீரென்றால்
             அருவருத்து  உமை ஒதுக்கி  வைப்பதன்றி
                          அனுதாபம்  கொள்வதற்கு வழியே யில்லை
                           

1 மறுமொழிகள்:

said...

போதுமென்ற மனம் இருந்தும்
போதாது போதாதென்று
தரமிங்கு எதுவெனவே
தெரியாமல் திகைப்பவர்க்கு
அறிவூட்டும் பாடலினை
அழகுதமிழ் அச்செழுத்தில்
எமக்கிங்கு வழங்குகிறீர்
வாழி நும் தொண்டு!