Friday, October 3, 2008

போற்றி நிற்கும்

  குடி தன்னை ஒழிப்பதற்காய் பெரு முயற்சி
  கொண்டுள்ளார் மருத்துவராம் இராமதாசர்
  அடிமைகளாய் ஏழைகளை மீண்டும் மீண்டும்
  ஆக்குகின்ற குடி ஒழிக்க வேண்டும் வேண்டும்
  கொடுமை இதை நீக்குதற்கு தமிழர் யாரும்
  குரல் கொடுத்து மருத்துவரை வாழ்த்த வேண்டும்
  படுகின்ற ஏழையரின் துன்பம் நீக்க
  பாடுபடும் மருத்துவரைப் போற்ற வேண்டும்


  ஏழைகளை மீண்டும் மீண்டும் ஏழையராய்
  எப்போதும் வீழ்த்துகின்ற குடியதனை
  வாழையடி வாழையென அவரை மட்டும்
  வதைக்கின்ற பேரழிவைச் சீரழிவை
  கோழையைப் போல் அதை எதிர்த்துப் போராடாத
  கூட்டத்தை வள்ளுவரை மறந்தார் தம்மை
  நாளை வரும் உலகம் அது தூற்றி நிற்கும்
  நலம் காணும் மருத்துவரைப் போற்றி நிற்கும்

0 மறுமொழிகள்: