Wednesday, October 22, 2008

பழம்பாடல் கம்பன்

 வறுமையினைக் கண்டெதற்கு அஞ்சுகின்றீர் என்
  வாசல் வந்த பின்னாலும் வேண்டாம் வேண்டாம்
  உரிமை உமக்கு இவ்வாசல் என்று சொல்லி
  ஒரு நாளும் அடைக்காத பெரிய வாசல்
  கருமை நிற எருமைகளும் குளிக்கும் நேரம்
  கன்று என்று முட்டுகின்ற மீனை எண்ணி
  சொரிந்து நிற்கும் பாலதனை வீடு வரை
  சொர்க்கம் எங்கள் சடையப்பன் வெண்ணெய் நல்லூர்



  கம்பன்

  மோட்டெருமை வாவிபுக முட்டு வரால் கன்றென்று
  வீட்டளவும் பால் சொரியும் வெண்ணையே - நாட்டில்
  அடையா நெடுங் கதவும் அஞ்சலென்ற சொல்லும்
  உடையான் சடையப்பனூர்

0 மறுமொழிகள்: