Friday, October 3, 2008

அன்பு செய்வீர்

  கடவுளினை நம்புகின்றார் என்று சொன்னால்
  கட்டாயம் அவர்கள் எல்லாம் ஒன்றுதானே
  மடமை அது கொண்டாராய் அடுத்தவரை
  மடித்திடவே முயன்றிடுதல் நியாயம் தானோ
  கடமையினை உணருங்கள் பக்தி என்றால்
  கனித் தமிழில் அன்பு என்று உணர்ந்திடுங்கள்
  மதமெல்லாம் கடவுளினையே போற்றுகின்ற
  மாண்பதனைக் கைக் கொள்வீர் அன்பு செய்வீர்

0 மறுமொழிகள்: