Monday, October 6, 2008

குருவை எண்ணி

 காந்தி யவர் செய்தித் தாள் தன்னில் ஒரு
  கட்டுரையில் தமிழ் நாட்டில் காங்கிரஸில்
  சேர்ந்து ஒரு குழு ராஜாஜிக் கெதிராய்ச் சில
  செய்கைகளைச் செய்வதுவாய் எழுதி விட்டார்
  காந்தியைத் தன் குருவாகக் கொண்டிருந்தும்
  காமராஜர் எதிர்த்து நின்றார் காந்தியாரை
  காந்தியவர் திருத்திக் கொண்டார் தவறதனை
  காமராஜர் மனம் சிறந்தார் குருவை எண்ணி

1 மறுமொழிகள்:

said...

அரியதொரு தகவல்.
தெரிவித்தமைக்கு நன்றி!