Monday, October 6, 2008

தேவர் மகன்

  விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது
  விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
  அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
  அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
  தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
  தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
  அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
  அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


  வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்
  விருதுநகர் இருக்காது என உரைத்தார்
  அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
  அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
  கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
  கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
  வடுவில்லா காமராஜர் தன் வழியில்
  வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்

1 மறுமொழிகள்:

said...

//கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்//

ஆனால் இவர் பெயரில் இன்று கட்டப்பஞ்சாயத்து நடத்தி பிழைப்பை ஓட்டுது சில கூட்டம்...