Monday, October 27, 2008

அதுவே விழா

கூடி மகிழ்வதற்காய் விழாக்கள் தம்மை
  கொண்டிங்கு கூட்டி வைத்தார் பெரியவர்கள்
  ஆடி மகிழ்வதற்கும் உறவுக்கெல்லாம்
  அன்பு செய்து வாழ்வதற்கும் இடங்கள் தந்தார்
  பாடி மகிழ்கின்றீர் உறவையெல்லாம்
  பார்த்து மகிழ்கின்றீர் என்ற போதும்
  வாடிக் குலைவுற்று நிற்பார் தம்மின்
  வாழ்வைச் சரியாக்கும் அதுவே விழா

0 மறுமொழிகள்: