Wednesday, October 22, 2008

வழியேயில்லை

 எழுதுவதில் உண்மை நிலை இருந்து விட்டால்
  எல்லோரும் படித்து நிற்பர் போற்றி நிற்பர்
  பழுது சொல்லி அனைவரையும் தூற்றி நிற்றல்
  பார் நான்தான் பேரறிஞன் என்று சொல்லல்
  தொழுது என்னைப் பணிந்து விடு இல்லையென்றால்
  தூள் தூளாய்ப் போய் விடுவாய் என மிரட்டல்
  அழுவதன்றி என்ன செய்ய இவரைக் கண்டால்
  அனுதாபம் கொள்வதன்றி வழியேயில்லை

0 மறுமொழிகள்: