Monday, October 13, 2008

குறட் கருத்து

 அறிவின்றி அடுத்தவரின் துன்பம் தீர்க்கும்
  அன்பின்றி வாழ்பவரின் நட்பு தன்னை
  விரைவாக விட்டொழித்தல் பெரும் பேறேன்று
  வியன் உலகப் பெரும் அறிஞர் வள்ளுவனார்
  தெளிவாகச் சொல்லி நின்றார் மிக இனிது
  தீதான அந்நட்பை விடுதல் என்றார்
  பெறுவோம் அவ்வழியதனை வள்ளுவனார்
  பேச்சொன்றே தமிழருக்கு மூச்சாய்  ஆகும்


  ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஓரீஇ விடல்

  பெரிதினிது பேதையர் கேண்மை பிரிவின் கண்
  பீழை தருவதொன்றில்

0 மறுமொழிகள்: