Friday, October 3, 2008

உணர்ந்தாரின்று

  இயற்கை வழி வேளாண்மை தனைஒழித்து
  எவர் சொன்ன வழியிலெல்லாம் சென்றழிந்து
  முயற் கொம்பு என்றதனை இன்றுணர்ந்து
  முயலுகின்றார் நம் வழியை மீண்டும் இன்று
  கயல் பிறழ்ந்த கழனியிலே மருந்தைக் கொட்டி
  கருவுறவே முடியாமல் மண் கெடுத்து
  அயல் நாட்டான் பேரழிவைத் தந்த பின்னர்
  அன்னை நாட்டார் நல்லறிவை உணர்ந்தாரின்று

0 மறுமொழிகள்: