Tuesday, October 28, 2008

மக்கள் தொலைக் காட்சி

  பாரதியின் பாடலுடன் தொடங்குகின்றார்
  பைந்தமிழின் தேவார வாசகங்கள்
  சீர் மிகுந்த வாய் மொழியும் ஏசு நாதர்
  செப்பி நின்ற நல் வழியும் நபி பெருமான்
  கூர்மை மிகு நல் மொழியும் பாடுகின்றார்
  கூத்தோடு நல்ல தமிழ்க் கலைகள் எல்லாம்
  ஆர்வமுடன் தருகின்றார் மருத்துவரின்
  அழகான மக்கள் தொலைக் காட்சியார் தாம்


  பார் முழுதும் இருக்கின்ற தமிழர் எல்லாம்
  பார்க்க வேண்டும் மக்கள் தொலைக் காட்சியினை
  சீர் நிறைந்த தமிழ்ப் பணியைச் செய்து நிற்பார்
  செப்பேட்டுத் தமிழறிஞர் நன்னன் நன்கு
  வேரான தமிழ்க் கலைகள் விளையாட்டுக்கள்
  விபரங்கள் அனைத்தையுமே தந்து நின் றார்
  நேரான தமிழுக்காய் மருத்துவரின்
  நிலைத்த புகழ் மக்கள் தொலைக் காட்சியார் தாம்

1 மறுமொழிகள்:

said...

அழகு !
மிகவும் சிறப்பாகப் பாராட்டி உள்ளீர்கள் அய்யா!