Saturday, May 3, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

     தாமதமாய்   வந்து விட்ட  காளை  கண்டான்
          தளிர்க்  கொடியாள்  உறக்கமதைத் தழுவியதை
     பூம்ணத்து  மேனியினைத் தான்  தழுவி
          புதுக் கதைகள்  பல படித்து மேனியெங்கும்
     நாமணக்க  முத்தமிட்டு  மேலும் மேலும்
          நல்கு  என  அவள்   வேண்ட  மீண்டும் மீண்டும்
     ஆவணமாய்  அழகு மயில்  உடலம்  கொண்டு
         அனைத்தையுமே  பத்திரமாய்  எழுதிப்  பின்னர்

     
     கோமகளும்  உறங்குவதே  வழக்கம்  என்ன
          கோபத்தில்  துயில்  கொண்டாள் என நினைந்தான்
     சாமமிது  இவ்வுறக்கம்  இதனை  நாமும்
          சரியாக்ப்  பயன் படுத்தல்  வேண்டும்  என்றே
     ஆவலினை  நெஞ்சினிலே  கொண்டான் அந்த
            அழகு மயில்  அருகினிலே சென்றான் நின்றான
     தாவி  அவள்  இடையினுக்கு  இடையே  தன்னின்
          தடக்கையைக்  கொண்டு   வைத்தான் விழித்தாளில்லை

     ஆவலதில்  மார பிரண்டும்  விம்மியோங்க
          அழகு மயில்  நடிக்கின்றாள் துயில்வாள் போல
     காவலனோ  வைத்த கையை  எடுக்கவில்லை
          கண்மணியோ நடிக்கின்றாள்  விழிக்கவில்லை
     பாவலனாம்  ஜெயங்கொண்டப்  பாவி மன்னன்
          பாப்புனைந்து  தந்துள்ளான் பரணி தன்னில்
    தாவி  வரும்  செய்யுளதைப்  பின்னால்  தந்தோம்
          தமிழினத்தார்  இப் பெருமை  நமக்கே  சொந்தம்



                                     செய்யுள்

     இத்துயில்  மெய்த்துயில்  என்று  குறித்து இளையோர் அடியிற்
     கைத்தலம்  வைத்த்லும்  பொய்த்துயில்  கூர் நயனக்
     கடை திறவா மடவீர்  கடை திறமின்  திறமின்

1 மறுமொழிகள்:

said...

//பாவலனாம் ஜெயங்கொண்டப் பாவி மகன்
பாப்புனைந்து தந்துள்ளான் பரணி தன்னில்
தாவி வரும் செய்யுளதைப் பின்னால் தந்தேம்
தமிழினத்தார் இப் பெருமை நமக்கே சொந்தம்//

இதுதான் அய்யா..உங்கள் டச்!

அற்புதமாக உள்ளது.

இப்படி ஒரு பெட்டகத்தை உருவாக்கித்தந்துவிடுங்கள் போதும்!