Friday, May 9, 2008

வாரியார் சுவாமிகள்

          மயிலூர்தி  தனில்  வந்து  முருகன்  என்னை
                     மணம்  சேர  அழைத்திடுவான் என்று  சொல்வார்
          வய்லூரில்  வந்துதித்த   வாரியார்தான்
                     வானூர்தி தனில்  மேலே மரணம்  கண்டார்
          உயிரான  தமிழமுதை  உலகமெல்லாம்
                     ஊட்டி நின்ற  ந்மைப் பெற்ற தாயேயானார்
         அயராது உழைத்து நின்ற அன்பர்க்கன்பர்
                     அவர் விருப்ப்ம் போல்  மரணம்  வந்த தம்மா


         போகாத  ஊரில்லை  தமிழை  என்றும்
                     பொழியாத   நாளில்லை  அவரைக் கண்டால்
         ஆகாத  பேர் வழிகள்  மனத்தில்  கூட
                     ஆநந்தக் கிருபை  தரும்  அன்பின் செம்மல்
         சாகாம்ல்  வாழ்வதற்குப் பிறந்தார்  தம்மின
                      சரித்திரங்கள்  சொல்லி நின்ற மாமனிதர்
         ஆகா  அப்பட்டியலில்  அவரும் சேர்ந்தார்
                      அன்னை தமிழ்  பெற்றெடுத்த  வாரியாரே
                     

2 மறுமொழிகள்:

said...

////சாகாம்ல் வாழ்வதற்குப் பிறந்தார் தம்மின
சரித்திரங்கள் சொல்லி நின்ற மாமனிதர்
ஆகா அப்பட்டியலில் அவரும் சேர்ந்தார்
அன்னை தமிழ் பெற்றெடுத்த வாரியாரே////

முத்தாய்ப்பான வரிகள். அருமை அய்யா!

said...

அற்புதம் அய்யா!

வாரியார் சுவாமிகளுடன் உங்களுக்கு ஏற்பட்ட சந்திப்பும், சம்பவங்களும் சொல்லுங்கள் அய்யா!