Monday, May 12, 2008

செத்தே போனார்

      ஏழைகட்கும்  நல்லவர்க்கும்  உண்மையாக
                எப்போது  வாழ்ந்தாலும்  இன்றும்  உள்ளார்
      கோழையென தன்  குடும்பம் தன்னைக் காக்க
                கொள்ளைகளை அடித்தாரோ  மறைந்தே போனார்
      வாழையடி  வாழையென  வள்ளுவரும்  
                வழி வந்த  நல்லவரும்  சொல்லிச் சென்றார்
       பேழைகளை நிறைத்தார்கள்  மாறினாரா
                 பெருஞ் செல்வர்  என்றாகிச் செத்தே  போனார

1 மறுமொழிகள்:

said...

/////பேழைகளை நிறைத்தார்கள் மாறினாரா
பெருஞ் செல்வர் என்றாகிச் செத்தே போனார்////

அடித்துச் சேர்த்தவரின் அருமைப் பிள்ளகளெல்லாம்
அடுத்தடுத்து நீதிமன்றம் அலைவது காணீர்!