Wednesday, May 21, 2008

ஒழிந்தே போவீர்

          ஏழைகளை  மீண்டும் எங்கும்  ஏய்க்கின்றார்கள்
                       ஏய்த்தவர்கள்  இங்கேயே  வாழ்கின்றார்கள்
          கோழைகளாய்  அவர்களிடம்  கையையேந்தி
                        கூட்டாளியாகி  நின்றார்  படித்தவர்கள்
           வாழையடி  வாழையென திருடர்  முன்னே
                         வதை பட்டு  வாழ்வது தான்  ஏழை  வாழ்வா
             ஏழைகளே  ஒன்றாவீர்   ஆகி விட்டால்
                           ஏய்ப்பவர்கள் அடியோடு ஒழிந்தே  போவார்

2 மறுமொழிகள்:

said...

நெல்லை கண்ணன் அய்யா,
அய்யய்யோ என்னங்க இது?உங்களுக்கு இந்த தி மு க தலைவர்கள் மீது கோபம் இருக்கலாம்.அதுக்காக இப்படியா சாபம் கொடுப்பீங்க?

பாலா

said...

அன்புள்ள பாலா அய்யா வணக்கம்.
இல்லை அய்யா இந்தியாவின் நிலை
கண்டு வருத்தத்தில் எழுதினேன்.
இவர்களும் அதற்குள் அடங்குகின்றனர்
நன்றி அய்யா.வாழ்க தமிழுடன்

தங்கள்
நெல்லைக்கண்ணன்