Sunday, May 25, 2008

திருக்குறள்

              வானத்தில்  அமுதம்  அது  இருக்குதென்று
                        வழிவழியாய்  முன்னோர்கள்  சொல்லித் தந்தார்
              போனால்த்தான்  கிடைக்கும்  என்றும் அவரே  சொன்னார்
                        பொய்யென்று  சிலர்  அதனை  எதிர்த்தும் நின்றார்
               ஆனால்  நம்  வள்ளுவரோ  தெளிவு தந்தார்
                         அறிவு  தந்தார  நந்தமையே  உணர வைத்தார
               வான்  தானாய்  தீங்கின்றி  வழங்குகின்ற
                          வளர் மழை தான்  உயிர்க்கெல்லாம்  அமுதமென்றார்


                                                      குறள்  


                   வான் நின்று  உலகம்  வ்ழங்கி  வருதலால்
                   தான்  அமிழ்தம்  என்றுணரற் பாற்று
                         

1 மறுமொழிகள்:

said...

நல்லதொரு குறளுக்கு நற்றமிழில் அரும் விளக்கம்!

//வ்ழங்கி // த. பி.