Monday, May 19, 2008

எங்கள் ஜீவா

                  உண்மையாய்  வாழ்வதற்கே  உதித்த  தோழன்
                         உயர்  குணத்தான்  நற்றமிழான் சொல்லில் வல்லான்
                   கண்களிலே  ஆறாக  நீரே  ஒடும்
                         கவலைகளே  கொண்டிருந்தும் நேர்மை  கொண்டான்
                   பண்பினிலே  மிகச் சிறந்தான்  இறுதி வரை
                         பகட்டின்றி  வாழ்ந்திருந்தான்  வறுமை  தன்னை
                   நண்பனெனக்  கொண்டிருந்தான்  உதவுதற்கு
                         நாட்டினிலே  பலர்  வந்தார் மறுத்தே வென்றான்


                   விடுதலைக்காய்  சிறை சென்றான்  ஏழ்மையினை
                          வேரறுக்கத் தனையே   தான்  தந்து  நின்றான்
                    சிறுமைகளை  எதிர்ப்பதிலே  சீறி நின்றான்
                           செஞ்சட்டை  முதல்  தமிழன்  அவனே  யென்றான்
                    கடுமைகளைத் தண்டனையாய்  அடைந்த  போதும்
                            கலங்கவில்லை மென்மேலும்  எதிர்த்து  நின்றான
                    அடிமை  விலங்கறுப்பதையே  மூச்சாய்க் கொண்டான்
                             அன்பர்  எங்கள்  ஜீவாவே  அன்றும்  வென்றார்

                     

1 மறுமொழிகள்:

said...

தோழர் ஜீவாவைப் போலவே எளிமையான பாடல்!
நன்று.