Thursday, September 4, 2008

இராம கவிராயர்

பிள்ளையார் கோயிலுக்குப் போனார் கவிராயர்
பெற்ற கொடைப் பொருள் அனைத்தும் இழந்திட்டார் கோயிலிலே
உள்ளம் தமிழுள்ளம் கவியாக பொங்கிற்று
உரைக்கின்றார் அவரிடத்து குலமே திருடும் என்று
வள்ளியெனும் வேடர் குலப் பெண்ணை திருடியது
வடிவேலன் உன் தம்பி உன் மாமன் மாலவனோ
வெண்ணெய் திருடி வெகு காலம் குலப் புத்தி
விநாயகரே நீரும் முடிச்சவிழ்த்தீர் எந்தனிடம்

செய்யுள்

தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய் திருடி மாயனாம் - அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தி லுள்ள குணம்

0 மறுமொழிகள்: