Sunday, September 7, 2008

குறட் கருத்து

குடி யிருக்கவீ டின்றி அலையும் மாந்தர்
  குறை யதனை நினைத்து நினைத் தேங்குகின்றார்
  அடி யிரண்டில் உல காண்ட வள்ளுவரோ
  அறிவார்ந்த செய்தி ஒன்றைச் சொல் லுகின்றார்
  துடிக் கின்ற உயிரதுவும் குடி யிருக்க
  தூய ஒரு இடம் இன்றி வீடு தேடி
  அடிக் கடியே இடம் மாற்றி அலை கிறதாம்
  அதனால் தான் பிறப் பிறப்பு நிகழ் கிறதாம்


  குறள்

  அறத்துப்பால் நிலையாமை 10ம் குறள்

  புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு

1 மறுமொழிகள்:

said...

பிறப் பிறப்பு சிலேடை அபாரம்!