Saturday, September 27, 2008

நபி பெருமான் சொன்ன பதில்

  இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
  இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
  வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
  விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
  இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
  எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
  இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
  இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

  (வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
  வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
  138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12

0 மறுமொழிகள்: