Thursday, September 4, 2008

குறட் கருத்து

 கற்றுத் துறை போகிக் காமுற்றுக் கல்வியினைப்
  பெற்றுத் துறை போகும் பேரறிவார் தம்மிடத்தில்
  பெற்ற கல்வியினைப்பேசிப் பெருமையுறல்
  நற்றவமாய்த் தானாய் வளரும் பயிரதற்கு
  நலமாகத் தண்ணீரைத் தான் பாய்ச்சல் போலுயரும்
  மற்றவரின் முன்னாலே வாய் திறத்தல் அய்யய்யோ
  மலிவாக்கி அமுதமதை பாத்திரங்கள் கழுவுகின்ற
  முற்றமதின் அங்கணத்தில் கொட்டுவதாய் வீணாகும்


  குறள்

  பொருட்பால் அவை அறிதல் குறள் 8ம் 10 ம்

  உணர்வதுடையார் முன் சொல்லல்வளர்வதன் 
  பாத்தியுள் நீர் சொரிந்தற்று

  அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
  அல்லார் முன் கோட்டி கொளல் 
   
   
   

0 மறுமொழிகள்: