Sunday, September 14, 2008

பேசலாமா?

 உடல் விற்றுப் பிழைக்கின்றார் என்று சொல்லி 
  ஊரெல்லாம் பேசுகின்றார் ஏசுகின்றார்
  தடம் கண்டு அவர் தேடி மீண்டும் மீண்டும்
  தழுவுதற்குச் செல்வாரைப் பேச மாட்டார்
  அடம் பிடித்தா அந்தத் தொழில் செய்து நின்றார்
  அவர் வயிற்றுப் பசிக்காகச் செய்து வாழ்ந்தார்
  தடம் மாற்றி அவர் காக்க எண்ணா மாந்தர்
  தனை மறந்து பண்பாடு பேசலாமா?
   

0 மறுமொழிகள்: