Tuesday, September 16, 2008

பழம்பாடல் வேதநாயகம் பிள்ளை

 புகழுகின்றார் போலவே தான் இகழ்கின்றாரா
  புகழ்வேத நாயகம் பிள்ளை யவர்
  திகழ் தமிழில் கேட்கின்றார் இனிய கேள்வி
  தினம் தினமும் தமிழ் படிக்கும் சுகமே வேறு
  அகம் மகிழ இந்திரனே சந்திரனே
  அப்பா நீ என்றிங்கு புகழுகின்றார்
  ஜெகம் அறியும் அவர்களது செய்கைகளை
  சிறப்பல்ல மிகச் சிறுமை மிகச் சிறுமை

   
  பிறன் மனையைப் புணர்வதற்காய் கோழியாகிப்
  பெண்குறியை உடலெங்கும் பெற்று நின்றான்
  தரமில்லா இந்திரனும் அவனைப் போல
  தாரையெனும் குரு மனைவி தன்னைச் சேர்ந்தான்
  பரமசிவன் தலையமர்ந்த சந்திரனும்
  பாவியிவர் என்று நம்மை மறைமுகமாய்
  விதம் விதமாய்ப் புகழுதல்போல் ஒழிக்கின்றாரோ
  விளங்கவில்லை என்கின்றார் புலவர் தானும்

  செய்யுள்
  வேத நாயகம் பிள்ளை

  இந்திரன் நீ சந்திரன் நீ என்னல் பிறன்மனையைத்
  தந்திரமாக் கூடுஞ் சழக்கன் நீ - வந்த குரு
  பத்தினியைச் சேர்ந்த படு பாவி நீ என்பதாந்
  துத்தியமோ நிந்தனையோ சொல்

0 மறுமொழிகள்: