Monday, September 22, 2008

வாழ்கின்றாரே

 நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
  நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
  படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
  படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
  துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
  துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
  வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
  வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே

0 மறுமொழிகள்: