Sunday, September 14, 2008

பழம் பாடல் கம்பன்

  சீதையவள் பேசுகின்றாள் இராமனிடம்
  தீக்குளிக்கச் சொன்னானே அதற்குப் பின்னர்
  பேதையல்ல சீதையவள் என்பதனை
  பேச்சு வழி காட்டுகின்றான் கம்பன் தானும்
  மாதவளை நாவினிலே வைத்திருந்த
  மலர் வாழும் பிரமனோடு மாட்டின் மேலே
  கோதையவள் தன்னோடு இருக்கும் சிவன்
  குளிர் சங்குகைக் கொண்ட மாலவனும்


  யாரறிவார் பெண்களது மனதின் நிலை
  எல்லாம் அறிந்தாலும் அறிய மாட்டார்
  சீர் மகனே என் இணையே அவரின் நிலை
  செப்பி விட்டேன் நீ என்ன செய்வாய் அய்யா
  பார் முழுதும் பெண்களது நிலை இது தான்
  படைத்தவனும் காப்பவனும் அழிப்பான் தானும்
  தானறியார் என்றால் நீ என்ன செய்வாய்
  தளிர்க் கொடியார் நிலை இது தான் உணர்வாய் நீயும்



  கம்பன் செய்யுள்

  பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
  சங்கு கைத் தாங்கிய தரும மூர்த்தியும்
  அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
  மங்கையர் மன நிலை உணர வல்லரோ

0 மறுமொழிகள்: